தெற்கு அதிவேக பாதையில் பயணிக்கும் வாகனங்கள் மீது கற்கள் உள்ளிட்ட பொருட்களால் தாக்குதல் மேற்கொள்கின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாதையில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு மறைந்து கொள்ளும் நபர்கள் தொடர்பாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினமும் இதேபோன்ற சம்பவம் ஒன்று, முதல் நுழைவாயிலிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் வாகனமொன்றில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக இது தொடர்பான பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த பாதையில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு மறைந்து கொள்ளும் நபர்கள் தொடர்பாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினமும் இதேபோன்ற சம்பவம் ஒன்று, முதல் நுழைவாயிலிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் வாகனமொன்றில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களாக இது தொடர்பான பல முறைப்பாடுகள் தமக்கு கிடைத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.