ஜனாதிபதி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது


ஜனாதிபதி மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இளைஞர் கைது



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ் இளைஞர் ஒருவரைNயு காவல்துறையினர் இவ்வாறு கைது செய்துள்ளனர்.
 
அண்மையில் மிஹிந்தலைப் பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, கலந்து கொண்ட வேளை குறித்த இளைஞர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் அனுராதபுர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகிறது.
 
சந்தேக நபரை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில்வைக்குமாறு அனுராதபுர மேலதிக நீதவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now