உடுதும்பர - கடுகஸ்ஓயா பிரதேசத்தில் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 15 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்ட அதிபர், மாணவிகள் சிலருக்கு படசாலையில் வைத்து அபாச வீடியோ காட்சிகளை காண்பித்துள்ளதாக கடந்த 6ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டதாக உடுதும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

