யாழில் தினமும் 8 மணிநேரம் மின்சாரம் துண்டிப்பு

யாழில் தினமும் 8 மணிநேரம் மின்சாரம் துண்டிப்புயாழ். மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்படும் வீதிப் புனரமைப்பு நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் நாளாந்தம் 8 மணி நேரம் மின் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாக சுன்னாக மின்சார சபையின் பிரதம மின்பொறியியலாளர் எஸ். கணேசநேசன் தெரிவித்துள்ளார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக நாளாந்தம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு கைத்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது தமக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சில பத்திரிகை நிறுவனங்கள் மின் பிறப்பாக்கிகளின் உதவியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now