
வெளிநாட்டு
மைதானங்களில் தொடர் தோல்வி அடையும் இந்திய அணி குறித்து அசாருதீன்
கூறுகையில், தற்போது இந்திய அணிக்கு திறமையான வீரர்கள் தேவை. மூத்த
வீரர்களுக்கு நல்ல பெயரும் புகழும் இருக்கிறது. ஆனால் இளைஞர்களுக்கும்
வாய்ப்பு அளிக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரம்.
அவுஸ்திரேலியாவுக்கு
எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி ஏற்பட்ட உடனே இளைஞர்களுக்கு
வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. இதுபற்றி கிரிக்கட்
வாரியம் தான் யோசிக்க வேண்டும். இந்திய அணிக்கு கிடைத்த நல்ல அணித்தலைவர்
டோனி. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
டெஸ்ட்
மற்றும் ஒருநாள் போட்டிகளில் அணியை நல்ல நிலையில் வைத்திருந்தார். ஆனால்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது திறமை வெளிப்படவில்லை
என்பது உண்மை.
இதை
இந்திய கிரிக்கெட் வாரியம் கவனிக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில்
என்ன நினைக்கிறேன் என்றால் அணிக்கு தனித்தனி அணித்தலைவர்கள் தேவை.
டெஸ்ட் அணிக்கு சேவக் அல்லது வீராட் கோலியை நியமிக்கலாம். டெஸ்ட் அணியை வழிநடத்தி செல்லும் திறமை அவர்களுக்கு இருக்கிறது என்றார்.