முக நூலை வைத்து இலங்கையில் காசு கறக்கும் திருடர்கள் !

இலங்கையில் முக நூலின்(பேஃஸ் புக்) பாவனையாளர்கள் அதிகரித்துச் செல்லும் இவ்வேளையில் கடந்த 18 மாதங்களில் சுமார் 1800 முறைப்பாடுகள் இது தொடர்பாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாக கம்பியூட்டர் எமர்ஜன்சி டீம் எனப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது. வேறு நபர்களின் பெயரில் கணக்கைத் திறப்பதும் பின்னர் அதனைப் பாவித்து குறிப்பிட்ட அந்த நபரின் நண்பர்களிடம் பணம் கறப்பதும் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இது தவிர பிறரது பேஃஸ் புக் கணக்கை ஹக் செய்து அவர்களின் கணக்கை முடக்குதல் பின்னர் அதனை உரியவரிடம் கொடுக்க பணத்தை கப்பமாகப் பெறுதலும் நடைபெற்று வருவதாக இவ்வமைப்பு மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வகையான மிரட்டல்களும் காசு கறக்கும் நிகழ்வுகளும் பல இடம்பெற்றாலும் இதை ஒரு பாரதூரமான விடையமாக மக்கள் எடுத்துக்கொள்ள வில்லை என்றும் சொல்லப்படுகிறது. காரணம் இவ்வாறு ஒருவரின் முக நூல் கணக்கை முடக்கி பின்னர் கப்பம் கோருவோர் பெருந்தொகைப் பணத்தை கோருவது இல்லை என்கிறார்கள் சிலர். எனவே பாவனையாளர்கள் கப்பம் கேட்டவரின் காசைக் கொடுத்துவிட்டு தமது முக நூல் கணக்கை திரும்பப் பெற்றுக்கொள்கின்றனராம்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now