பயணிகளது நன்மை கருதியே இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறாக பயணிகளுக்கு அளெகரியங்களை ஏற்படுத்தும் போக்குவரத்து சபை ஊழியர்கள் குறைத்தளவிலேயே உள்ளனர்.
எனினும் இவ்வாறு நடந்து கொள்ளும் ஒரு சிலரால் போக்குவரத்துச் சபைக்கு அபகீர்த்தி ஏற்படுகிறது.
எனவே இனிவரும் காலங்களில் இந்நிலை தொடராது என அச்சபை தெரிவிக்கிறது.
நேற்றைய தினம் பாடசாலை மாணவர் ஒருவர் பணம் செலுத்தாமையினால் பஸ்ஸில் இருந்து கீழ் இறக்கி விடப்பட்ட சம்பவம் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த பஸ்ஸில் கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

