நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை



யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரி லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்.

இம் மூன்று இராணுவ வீரர்களுக்கிடையில் இடம்பெற்ற தனிப்பட்ட தகராறு காரணமாகவே இராணுவ வீரர் ஒருவர் ஏனைய இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்தாக அவர் குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் இது ஒரு தீவிரவாத செயல் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now