நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒருவருடத்திற்கு பஸ்கட்டண அதிகரிப்பு கிடையாது: போக்குவரத்து அமைச்சர்


அடுத்துவரும் ஒரு வருட காலப் பகுதிக்குள் எதுவித பஸ் கட்டண உயர்வும் மேற்கொள்ளப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பஸ் கட்டணம் இருபது சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அது பொது மக்களைப் பாதிக்கவில்லை. பொது மக்கள் இரு மடங்கு கட்டணத்தை கொண்டிருக்கும் சொகுசு பஸ் வண்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடிப்பது இதற்கு நல்ல உதாரணம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்று கையில். எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து பஸ் கட்டணமும் இருபது சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்துவரும் ஒரு வருட காலத்திற்கு எதுவித கட்டண உயர்வையும் மேற்கொள்ள கோரமாட்டோம் என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் உறுதி யளித்துள்ளனர்.

அந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்பவே இக்கட்டண உயர்வுக்கு இடமளிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் ஜுலை மாதம் வருடாந்த பஸ் கட்டண உயர்வு இடம்பெறாது. அதற்கும் சேர்த்தே இப்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now