குமரன் பத்மநாதனை[K.P] அரசாங்கம் ஏன் இந்தியாவிற்கு நாடு கடத்தவில்லை – ஐக்கியதேசியக் கட்சி

குமரன் பத்மநாதனை ஏன் அரசாங்கம், இந்தியாவிற்கு நாடு கடத்தவில்லை என ஐக்கியதேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையுடன் குமரன்பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்

லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில், குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் ஓர் குற்றவாளி என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே அரசாங்கம் ஏன் குமரன் பத்மநாதனை இந்தியாவிடம்ஒப்படைக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

 குற்றவியல் விவகாரங்கள் தொடர்பில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்து நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now