உலகிலேயே மிக மலிவாக கணினி ஆகாஷ் உருவாக்கம்

உலகத்திலேயே மிக மலிவான கணினி என்ற புகழ் பெற்ற ஆகாஷ் கணினியை உருவாக்கும் திட்டத்தில் மேலும் 3 ஐஐடிகளை இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

விலை மலிவான ஆகாஷ் கணினியை உருவாக்குவதில் தலைமை தாங்கி வரும் ஐஐடி ராஜஸ்தான் கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி மும்பை, ஐஐடி மெட்ராஸ், ஐஐடி கான்பூர் ஆகியவையும் பணியாற்ற மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் ஆகாஷ் கணினியில் மேலும் பல தொழில்நுட்பங்களை இணைக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் ஐஐடியில் பயிலும் மாணவர்களும், பேராசிரியர்களும் உதவி செய்வார்கள்.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக வசதிகளைக் கொண்ட விலை மலிவான ஆகாஷ் கணினியை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே 

இந்த முடிவை மத்திய அமைச்சகம் எடுத்துள்ளது. தற்போது அரசின் மானியத்துடன், ஆகாஷ் கணினி மாணவர்களுக்கு ரூ.1,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now