மாத்தறை மாவட்டத்தில் நால்வரின் ஆணுறுப்பைக் கடித்துக் குதறிய பெண்களைத்
தேடி மாத்தறைப் பொலிஸார் வலை விரித்துள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.
மாத்தறை மாவட்டத்தில் தனது காதலனின் ஆணுறுப்பை கடித்துக் குதறி
துண்டியாக்கிய காதலி ஒருவர் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் எனத்
தெரிவிக்கப்படுகிறது. அதே போன்று அந்த மாவட்டத்தில் தம்முடன்
விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களின் ஆணுறுப்பை கடித்துக் குதறி
துண்டாக்கிய விபச்சாரி ஒருவரும் தலைமறைவாகியுள்ளார். இவ்விருவரையும் தேடி
பொலிஸார் வலை விரித்துள்ளனர்.தமது ஆணுறுப்பை விபசாரிகளின் பல்லுக்கடிக்கு இரையாக்கிய நால்வரும் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிவிக்கப்படுகிறது.
விபச்சாரத்திற்கான பணத்தை உடனுக்குடன் கொடுக்காமல் பெரும் தொகை பாக்கியை நீண்ட காலமாக ஏமாற்றி வந்ததன் எதிரொலியாகவே விலை மாதர்கள் ஆடவர்களின் ஆணுறுப்பை கடித்துக் குதறி துண்டாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் மாத்தறைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்ட பெண்களையும் தேடி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


