முஸ்லீம்களின் வளிபாட்டுத் தலங்களை துரத்துவதையே குறியாகக்கொண்டுள்ள துறவிகள்! - தெஹிவளையிலும் அட்டகாசம்.


தெஹிவளை மிருகக்காட்சி சாலை கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று (25.05.2012) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்ததுடன் பின்னர் பிற்பகல் 4 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பதற்றத்தை அடுத்து இவ்விடயத்தை ஆராயவென தெஹிவலை பொலிஸாரால் இன்று தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை கட்டிடத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு பள்ளிவாயல் நிருவாகிகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.







Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now