இலங்கை அணிக்கு இவ் ஆண்டின் முதல் வெற்றி


Ajantha Mendis


இலங்கை அணி 5 விக்கெட்டுக்களினால் தென்னாபிரிக்காவை வென்று வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

தென்னாபிரிக்கா இலங்கை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது சர்வதேச ஒருநாள்  போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இவ் ஆண்டுக்கான முதலாவது வெற்றியினைப் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இதன்படி தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஏ பீ டி வில்லியஸ் 76 பந்தகளில் 3 சிக்ஸர் 8 பவுண்டரிகள் உட்பட  96 ஓட்டங்களை தனது அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட 300 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலங்கை அடைந்து வெற்றியைத் தன் வசப்படுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் தரங்க 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சங்கக்கார 31 பந்துகளில் ஒரு சிக்ஸர் 2 பவுண்டரிகள் உட்பட 32 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தில்சான் 87 ஓட்டங்களையும், திசிர பெரேரா 44 பந்துகளுக்கு முகங்கொடுத்து 69 ஓட்டங்களை ஆட்டமிழக்கமாமல் தனது அணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

நான்காவது ஒருநாள் போட்டியின் ஆட்ட நாயகனாக திசாரப் பெரேரா தெரிவு செய்யப்பட்டதுடன் அரைச்சதத்தினையும் பெற்றுள்ளார்.
இவ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நேற்றைய தினம் டைமன் மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now