நாட்டிற்கு
கிடைக்கபெற்றுள்ள சுதந்திர மூலம் பொருளாதார வெற்றியை கைப்பற்றி கொள்ள
வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதப்புரத்தில் இடம்பெற்ற 64வது சுதந்திர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை சீர்குலைக்க சிலர் முற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் ஏற்பட்;ட பிரச்சினைகளை நாட்டிற்குள் புகுந்த சிலர் முனைவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கைக்கு நிரந்தர சுதந்திரம் கிடைக்க பெற்றுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் இடம் பெறும் பிரச்சினைகளுக்கு எண்ணெய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்குவது வெளிநாட்டு பிரிவினை வாதிகளே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இனங்களுக்கு தனியான பிரதேசம் இல்லை என தெரிவித்த ஜனாதிபதி இலங்கை சகல இன மக்களுக்கும் சொந்தமானதென குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சக்திகளின் தீர்வு இலங்கை;கு ஏற்றதல்லவென தெரிவித்த அவர், மக்கள் விரும்பும் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், குரோதம் காட்டுபவர்களுக்கு குரோதம் செலுத்தாது அவர்களது அன்பு செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.