30 வருடங்களாக முன்னேற்றம் காணாத பிரதேசங்கள் கூட முன்னேற்றம் கண்டுள்ளது: ஜனாதிபதி

வெளிநாடுகளுக்கு சென்று தாய் நாட்டை காட்டிக் கொடுப்பதற்காக ஒரு  சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும், சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் சுதந்திர இலங்கையை பாதுகாப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 

பொலன்னறுவை நீர்வழங்கல் திட்டத்தை மக்களுக்காக திறந்து வைக்கும் பொருட்டு கல்லேல்ல நீர்வழங்கல் நிலையத்தில் நேற்று முந்தினம்  நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார்.

இலங்கையில் உருவாகியுள்ள அமைதி சூழ்நிலையில் வடக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, மலையகம் என்ற ரீதியில் பிரிந்து செல்லாது இலங்கையர் என ஒன்றிணைந்து இன்று மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

30 வருடங்களாக அபிவிருத்தியைக் காணாத பிரதேசங்கள் கூட அபிவிருத்தி செய்யப்பட்டு,  நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தியை மேற்கொள்ளும் செயற்றிட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அரசியல் பேதங்களை புறந்தள்ளி அனைவரும் ஒன்றாக கைகோர்த்து முன்னோக்கி பயணிக்கின்ற காலம் மலர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now