அதிகமாக எஸ்.எம்.எஸ். படிப்பவ‌ர்களுக்கு, உளவியல் பாதிப்பு ஏற்படும் – எச்சரிக்கை

அதிகமாகக் குறுந்தகவல்களை அனுப்புவதனால் நமது மூளையும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வொன்றில் நிரூபணமாகியுள்ளது.
அதாவது அதிகளவிலான குறுந் தக வல்களால் நமது வாசிப்புத் திறன் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இதனால் புதிய வார்த்தைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போவதுடன் அவற்றி னை ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குறி ப்பிடுகின்றனர்.

சாதாரணமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஆகியவற்றைப் படிப் பவர்களுடன் ஒப்பிடும் போது குறுந்தகவல் அனுப்புபவர்களின் மேற்கூறிய திறன்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவு களில் நிரூபணமாகியுள்ளது.

குறுந்தகவலானது மொழிக் கட்டுப் பாடற்றதாகவும், கொச்சை மொழி ப்பிரயோகம் நிறைந்த தகவல் பரி மாற்ற முறையாகக் காணப்படுவ துடன் குறிப்பிட்ட சிலருக்கிடை யில் மட்டுப்படுத்தப் பட்டதாகவும் காணப்படுகின்றது.

மேலும் குறுந்தகவலானது குறிப்பி ட்ட அளவு வார்த்தைகளை மட்டு மே கொண்டுள்ளதுடன் அதுவே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படு வதுடன், சில வார்த்தைகள் சுருக் கிப் பயன்படுத்தப்படுகின்றன.

இது மொழித்திறன் மற்றும் மொழியின் பாவனைகளை வெகுவா கக் குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now