கடன் வாங்கி வெயாங்கொடயில் மேம்பாலம்


பிரான்ஸ் வங்கியொன்றின் (BBVA Bank) நிதி உதவியுடன் வெயங்கொட பிரதான ரயில் கடவைக்கு மேலாக மேம்பாலம் ஒன்றை அமைக்க அராங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதித் திட்டமிடல் அமைச்சுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மலையகம், வடக்கு மற்றும் கிழக்கிற்கான பிரதான ரயில் பாதை வெயாங்கொட வழியாகப் பயணிக்கிறது.

வெயங்கொட ரயில் கடவையால் கட்டுநாயக்க செல்லும் B208 வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு 11.23 மில்லியன் யூரோ செலவில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்கென இரு கடன் ஒப்பந்தத்திலும் இலங்கை கைச்சாத்திடவுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now