அமெரிக்கா, பிரிட்டனின் முயற்சியை தோற்கடிப்பதற்காக கொழும்பில் மக்கள் பேரணி

ஜெனீவாவில்  நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சியை தோற்கடிப்பதில்  இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை லட்சக்கணக்கான மக்களை கொழும்புக்கு கொண்டுவரவுள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு விரோதமான சக்திகளுக்கு ஆதரவளிப்பதற்கு மக்களை வீதிக்கு கொண்டுவரும் முயற்சியாக ஐ.தே.கவும் ஜே.விபியும் அரசாங்கத்துக்கு எதிராக நாசகார அழிவுப் போராட்டங்களை ஆரம்பித்தாகவும் ஆனால் இலங்கையில் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான எழுச்சியொன்று இல்லாத நிலையில் அம்முயற்சிகள் வெற்றியளிக்காது எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.

இதேவேளை, தலா 10 லட்சம் ரூபா செலவில் கிராம அதிகாரி மட்டத்திலான  14,900 கிராம அபிவிருத்தி திட்டங்கள் மார்ச் 10 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் என அவர் கூறினார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now