கிளிநொச்சியில் நீர்வளத் திட்டங்களை செயற்படுத்த ஜப்பான் நிதியுதவி

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வளத் திட்டங்களை முழுமையாகப் புனரமைக்க 677,000,000 மில்லியன் யென்களை உதவியளிக்க ஜப்பானின் ஜயிக்கா நிறுவனம் இணங்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களை அண்டிய பகுதிகளில் நோய் பரவுவதை தடுத்தல், மக்களின் சுகாதார தரத்தை உயர்த்துதல் மற்றும் சுத்தமான குடிநீரை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்கீழ் 42 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பரந்தன் மற்றும் இரனைமடுவிற்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 14 கிராம சேவகர் பிரிவிலுள்ள 20,000 கிராமங்கள் நன்மையடையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now