போரை வென்ற இலங்கை, அமைதியையும் வெல்ல வேண்டும்

போரை வென்ற இலங்கை, அமைதியையும் வெல்ல வேண்டும்இலங்கையில் இடம்பெற்ற போரின் போது இறுதி மாதத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரும் நாடுகளுடன் நோர்வேயும் இணைந்து கொண்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்புக் கூறுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக நோர்வேயும் அறிவித்துள்ளது.

நேர்வேயின் அமைச்சரும், இலங்கைக்கான சமாதான முயற்சிகளில் ஈடுபட்டவருமான எரிக் சொல்ஹெய்ம், நோர்வேயில் இருந்து வெளியாகும் Aftenposten நாளிதழுக்கு இத்தகவலை குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை அரசு போரை வென்றுவிட்டது, ஆனால் இப்போது அமைதியை வெல்ல வேண்டிய தேவை அதற்கு உள்ளது“ என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now