
தமது அரசியல், சமயம், இனம் என்பவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு பெண்ணும் இந்த
இயக்கத்தில் சேரவேண்டுமென இந்த இயக்கத்தின் தலைவியான விசாக தர்மதாஸ அழைப்பு
விடுத்துள்ளார்.
சடுதியான இந்த விலை அதிகரிப்புகள் மக்கள் வயிற்றிலடிப்பதாகும் என அனோமா பொன்சேகா கூறினார்.
தனது கணவனின் ஓய்வூதியம் பறிக்கப்பட்டுள்ளதால் தனக்கு வருமானம் ஏதும்
இல்லையெனவும் இதனால் வாழ்க்கை செலவு அதிகரிப்பின் நெருக்குவாரத்தை தன்னால்
விளங்க முடிகின்றது என அவர் கூறினார்.
'மண்ணெண்ணெய் விலையேற்றம் பற்றி கடல்தொழிளாலர்களின் மனைவியர்கள் என்னிடம்
கூறியபோது அவர்களின் சோகத்தை என்னால் காணமுடிந்தது. நாம் ஏன் அமைதியாக
இருக்கின்றோம் . நாம் துணிந்து பேச வேண்டிய காலம் வந்துவிட்டது' என அவர்
கூறினார்.