மூன்றாம் தரப்பின் உதவியுடன் இலங்கை மீனவர்களை மீட்க நடவடிக்கை!



சோமாலிய கடற் கொள்ளையர்களின் பிடியில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தாம் கோரியுள்ள கப்பப் பணத்தை வழங்காவிட்டால் மீனவர்களை கொலை செய்யப்போவதாக சோமாலிய கடற் கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கென அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கியிருந்தனர்.

கால அவகாசம் நிறைவுற்றுள்ள நிலையில் இலங்கை மீனவர்களுக்கு எதுவித ஆபத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை என மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாம் தரப்பின் உதவியைப் பெற்று மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now