அரச சம்பளத்தை மோசடி செய்த ஆறு சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் கைது

சட்டவிரோதமாக அரச சம்பளத்தை மோசடிசெய்த தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் ஆறு சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள் கந்தளாய் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

இவர்கள் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடமைகளுக்கு உரியமுறையில் சமூகமளிக்காது சம்பளத்தைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பளம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் விசேட விசாரணை பிரிவு முன்னெடுத்துள்ளது.

Tag: நியூஸ்பெஸ்ட், அரச சம்பளம் மோசடி, சிவில் பாதுகாப்புப் படைவீரர்கள், தம்பலகாமம் பொலிஸ் நிலையம், கந்தளாய் விசேட விசாரணைப் பிரிவு
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now