புலிகளால்
தகர்க்கப்ப ட்ட முல்லைத்தீவு கல் மடுக்குளம் புனரமைக்கப் பட்டு நாளை
உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனை க்காகத் திறந்துவைக்கப்பட வுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 260 மில்லியன் ரூபா செலவில்
புனரமைக்கப்பட்ட இந்த குளத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்
ராஜபக்ஷ உத்தி யோகபூர்வமாகத் திறந்துவைக்கவிருப்பதாக வட மாகாண ஆளுநர் மேஜர்
ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம், 100 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு
விழாவிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொள்ளவிருப்பதாக அவர்
மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுதீன்,
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட
முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின்போது 2009ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் புலிகளால் தகர்க்கப்பட்ட கல்மடுக் குளத்தைப் புனரமைக்கும் பணிகள்
2010ஆம் ஆண்டு ஆரம்பித்துவைக்கப்பட்டன. இக்குளம் மீண்டும்
புனரமைக்கப்பட்டுத் திறந்துவைக்கப்படுவதால் இப்பகுதியைச் சேர்ந்த 1500
விவசாய குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
இதேவேளை, இந்தக் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான
அனுமதி வெகுவிரைவில் வழங்கப்படும் என்றும் வட மாகாண ஆளுநர் மேலும்
தெரிவித்தார்.