24 மணிநேரத்தில் 228 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

24 மணிநேரத்தில் 228 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்இன்று காலை 7 மணிவரையான 24 மணித்தியாலத்தில் 228பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 100 நோயாளிகள் தொடர்ந்தும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

60 பேர் வீதி வபத்துக்கள் காரணமாகவும், வீட்டில் இடம்பெற்ற திடீர் விபத்துக்கள் காரணமடாக 49 பேரும் காயமடைந்துள்ளனர்.

எனினும் தீ விபத்து தொடர்பில் காயமடைந்த நிலையில் எவரும் குறித்த காலப்பகுதிக்குள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் நிர்வாகி தெரிவித்தார்.

வழமையாக பண்டிகைக் காலங்களில் இடம்பெறும் விபத்துக்களை விடவும் இம்முறை விபத்துக்கள் குறைந்த அளவிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now