மதுபோதையில் வாகனம் செலுத்திய 90 பேர் கைது; கைது வேட்டை இன்றும் தொடரும்

மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும்  நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
 

இதற்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்திய 90க்கும் அதிகமான  சாரதிகள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் வேலைத்திட்டம் கடந்த 9ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஒரு வாரகாலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now