நடைமுறையிலுள்ள பஸ் கட்டணங்களை இடைநிறுத்துமாறு மனுத்தாக்கல்

அமுலிலுள்ள பஸ் கட்டணங்களை இடைநிறுத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி நேற்று  உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தது.
 

பஸ் கட்டணங்கள் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கொள்கைக்கு முரணாக இம்முறை பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் சுமித் பத்மபெரும ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.


தேசிய கொள்கையின் பிரகாரம் 15.8 வீதத்திற்கு மேற்படாத பஸ் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும், இறுதியில் 20 வீத பஸ் கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்கு இந்த கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படுமாயின், சுமார் 920 மில்லியன் ரூபாவை மக்கள் மேலதிக கட்டணமாக செலுத்த நேரிடும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நடைமுறையில் உள்ள பஸ் கட்டணங்களை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்து, மீண்டும் பஸ் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now