2012இல் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் 100


ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012இல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. 

அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும் என்றும் நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983இல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம். 20துகளில் அவர்களுக்கு நிதி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 70 வயதில் தான் ஓய்வடைவார்களாம். 

2012இல் பிறந்த, பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவார்களாம். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now