சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 2012ம் ஆண்டில் அதிபர் பதவியை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று சோதிடக் கணிப்பை வெளியிட்ட இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிபரப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 31ம் நாள் இரவு 2012ம் ஆண்டில் இந்திய அரசியல்வாதிகளின் நிலை தொடர்பாக எதிர்வு கூறும் சோதிடக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
தமிழ்நாட்டில் பிரபலமான ஆறு சோதிடர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அவர்கள் இந்தியாவின் அயலில் உள்ள ஆறு நாடுகளின் நிலைமைகள் குறித்தும் தமது எதிர்வு கூறல்களை வெளியிட்டனர்.
குறிப்பாக சிறிலங்கா பற்றிக் கருத்து வெளியிட்ட ஒரு சோதிடர், மகிந்த ராஜபக்ச 2012ம் ஆண்டு இறுதிக்குள் தனது பதவியை விட்டு - அரசியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்தை நிகழ்வில் பங்கேற்ற ஆறு சோதிடர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறிலங்காவிலும் டயலொக் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகியிருந்தது.
இதுபற்றிக் கேள்வியுற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுச பல்பிட்டவை அழைத்து, கண்டித்துள்ளார்.
மீ்ண்டும் இந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பாவதை தடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து குறிபிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சிறிலங்காவில் அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் இணைப்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் செய்மதித் தொலைக்காட்சி இணைப்புகளை வீடுகளுக்கு வழங்கி வந்த 40 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதி பெறாமல் வீடுகளுக்கு செய்மதித் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கி வந்ததாக இவர்கள் மீது குற்றத்தடுப்பு காவல்துறையினரின் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இணைப்புகள் மூலம் தென்னிந்தியாவில் இருந்து விடுதலைப் புலிகள் சார்பு கருத்துகள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை கொடுத்த தகவலை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 31ம் நாள் இரவு 2012ம் ஆண்டில் இந்திய அரசியல்வாதிகளின் நிலை தொடர்பாக எதிர்வு கூறும் சோதிடக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
தமிழ்நாட்டில் பிரபலமான ஆறு சோதிடர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அவர்கள் இந்தியாவின் அயலில் உள்ள ஆறு நாடுகளின் நிலைமைகள் குறித்தும் தமது எதிர்வு கூறல்களை வெளியிட்டனர்.
குறிப்பாக சிறிலங்கா பற்றிக் கருத்து வெளியிட்ட ஒரு சோதிடர், மகிந்த ராஜபக்ச 2012ம் ஆண்டு இறுதிக்குள் தனது பதவியை விட்டு - அரசியலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று குறிப்பிட்டார்.
அவரது இந்தக் கருத்தை நிகழ்வில் பங்கேற்ற ஆறு சோதிடர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சி சிறிலங்காவிலும் டயலொக் இணைப்பு மூலம் ஒளிபரப்பாகியிருந்தது.
இதுபற்றிக் கேள்வியுற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுச பல்பிட்டவை அழைத்து, கண்டித்துள்ளார்.
மீ்ண்டும் இந்த நிகழ்ச்சி மறுஒளிபரப்பாவதை தடுக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து குறிபிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சிறிலங்காவில் அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் இணைப்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் செய்மதித் தொலைக்காட்சி இணைப்புகளை வீடுகளுக்கு வழங்கி வந்த 40 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதி பெறாமல் வீடுகளுக்கு செய்மதித் தொலைக்காட்சி இணைப்புகளை வழங்கி வந்ததாக இவர்கள் மீது குற்றத்தடுப்பு காவல்துறையினரின் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இணைப்புகள் மூலம் தென்னிந்தியாவில் இருந்து விடுதலைப் புலிகள் சார்பு கருத்துகள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை கொடுத்த தகவலை அடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.