புலிகளின் தபால் முத்திரைகள் அச்சிடப்படவில்லை – கனடா

புலிகளின் தபால் முத்திரைகள் அச்சிடப்படவில்லை – கனடா


 
தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் அச்சிடப்படவில்லை கனடா அறிவித்துள்ளது.
 
புலிகளின் பிரிவினைவாத கோட்பாடுகளை ஆதரிக்கும் வகையில் தபால் முத்திரைகள் அச்சிடப்படவில்லை என கனேடிய தபால் கூட்டுத்தாபனம், இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் தெரிவித்துள்ளது.
 
புலிகளின் தபால் முத்திரைகள் அச்சிடப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அந்நாட்டு உயரதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் பிரச்சார நோக்கில் இவ்வாறு முத்திரைகளை வெளியிட்டு;ள்ளதாகவும் இவற்றை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டிருந்தது.
 
எனினும், இவ்வறு புலிகளின் உருவச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் அச்சிடப்படவில்லை என கனேடிய தபால் கூட்டுத்தாபன பிரதம நிறைவேற்று அதிகாரி தீபக் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தபால் முத்திரைகளுக்கு அனுமதி வழங்கும் போது பல்வேறு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now