மும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப் பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ் மஹால் அமைந்திருக்கும் இட த்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும் தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜ மஹால் கட்டும் பணி தொடங்கியது.
வெனிஸ்
நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி,
லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்… இப் படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு
வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப்
பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித குர்ஆனிலிருந்து வாசகங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜ கான்.
அதற்காக,
பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி
நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய
கையெழுத் தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றி
ருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!
தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர
வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக் கிறது. மண்ட பத்தின் இடது-வலது
பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங் கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு
இணையான இன் னொரு கட்டடம்) எழுப்பப் பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள்
ளை மார்பிள் கற்களும், விலை யுயர்ந்த மணி வகைகளும் பதிக் கப்பட்டு
ஜொலிக்கின் றன.
தொலைவிலிருந்து
மட்டுமல்ல… வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக
இருக்கும். ஆனால்… உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே
போய் வியப் பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை
தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்ட மிடப்பட்டுக்
கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.தாஜ்மஹால் சில அரிய தகவல்கள்!
தாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்த
அதுமட்டுமல்ல! பச்சை
வண் ண ஸ்படிகக் கற்கள் மற்றும் நீலம் கலந்த ஊதா நிறக் கற்கள்
எகிப்திலிருந்தும், அடுக்கு படிக கொம்புக் கற்கள் (சிவப்பு)
ஏமனிலிருந்தும், ஸஃபையர் என்னும் நீலக்கற்கள் ஸ்ரீலங்காவிலி ருந்தும், பவழம் அரேபியா விலிருந்தும், பச்சை வண் ண கனிமம் ரஷியாவிலிரு ந்தும் தருவிக்கப் பட்டுள்ள ன.


