கல்முனை - ஒஸ்மன் வீதியில் இன்று (23) காலை 07 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
ஒஸ்மன் வீதியில் பொதியொன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ரி-56 ரக ரவைகள் - 220, 84 எஸ் ரவைகள் - 70 மற்றும் எஸ்.பி வெடிமருந்து - 1 என்பவற்றை கல்முனை பொலிஸார் மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.