பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் தொடரும்
என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலும், ஆப்கன் எல்லைப்
பகுதியிலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகள் மீது அமெரிக்க படை தொடர்ந்து
தாக்குதல் நடத்தி வருகிறது. |
ஆள் இல்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டாலும், இதை அமெரிக்க வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 24 பாகிஸ்தான் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் முகாம் என கருதி, தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டதாக அமெரிக்கா கூறியது. ஆனால், அதை பாகிஸ்தான் ஏற்க மறுத்து, ஆப்கனில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பெட்ரோல் உள்பட பொருட்கள் அனுப்புவதை நிறுத்தியது. இதன்பின், இரு நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டது. இருதரப்பிலும் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை. இதற்கிடையே, கூகுள், யு,டியூப் வெப்சைட்களின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறோம். குறிப்பாக, பயங்கரவாத செயல்களில் தீவிரமாக ஈடுபடக் கூடிய அல்கய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தப்படுகிறது. இது தொடரும். இவ்வாறு ஒபாமா கூறியிருக்கிறார். அமெரிக்கா 2011ம் ஆண்டில் பாகிஸ்தான்,ஆப்கன் எல்லையில் 64 ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
பாகிஸ்தானில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும்! - ஒபாமா எச்சரிக்கை
Labels:
உலகம்