கடத்தப்பட்ட மாணவி கை,கால் கட்டப்பட்ட நிலையில் மீட்பு-பொகவந்தலாவையில் சம்பவம்

news  பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை 7.30 மணியளவில், ஆட்டோவில் சென்ற இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டு, மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
 
மேற்படி மாணவி இன்று வழமை போல பாடசாலை வரும் வழியில் ஆட்டோ ஒன்றில் வந்த சிலர் இவரை வழிமறித்து கடத்திச் சென்றுள்ளதாகவும்.சிறிது நேரத்தின் பின்னர் செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தின் வழியே வந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் பாடசாலைச் சீருடையுடன் மாணவி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் இருப்பதைக்கண்டு பாடசாலைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
 
இதனையடுத்து, பாடசாலை மூலம் பொகவந்தலாவை காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறையினர் மாணவியை மீட்டுள்ளனர். குறித்த மாணவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை காவற்துறையினரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now