ஓரின சேர்க்கை கணவர்களால் சீனப் பெண்களுக்கு எய்ட்ஸ் - அதிர்ச்சி தகவல்


சீனாவில் ஏராளமான பெண்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குயிங்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஷாங் பெல்சுயான் தலைமையிலான குழுவினர் எய்ட்ஸ் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பெண்களுக்கு அவர்களது கணவர்களால் எய்ட்ஸ் நோய் பரவியது தெரியவந்தது. அதுகுறித்து மேலும் விரிவாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், ஓரின சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் நாட்டின் கலாசார சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகும் தாங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழாமல் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் தங்களது எய்ட்ஸ் நோயை மனைவிகளுக்கும் பரப்புகின்றனர்.

ஓரின சேர்க்கை ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மூலம் சுமார் 1 கோடியே 60 லட்சம் பெண் கள் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களால் அவதிப்படு கின்றனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now