
இதுகுறித்து
கங்குலி கூறியதாவது, டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் போட்டி என 3
போட்டிகளுக்கும் தனித்தனி அணித்தலைவர்களை நியமிப்பது தொடர்பாக தெரிவு
குழுவினர் முடிவெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும்
கூறுகையில், சுழற்சிமுறையில் வீரர்களை களமிறக்கும் தோனியின் முடிவு
குறித்துப் பேசிய அவர், எப்போதுமே 11 வீரர்களும் சிறந்த களத்தடுப்பு
வீரர்களாக இருக்கும் வகையில் அணியைத் தெரிவு செய்ய முடியாது.
அவுஸ்திரேலிய
அணியில் 11 வீரர்களும் மிகச்சிறந்த களத்தடுப்பு வீரர்கள் என்று கூற
முடியாது. அதேபோன்று பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ஓட்டங்கள்
குவிப்பதும் முக்கியமானது.
தோனி
சமபலம் வாய்ந்த அணியையே பெற்றுள்ளார். அதனால் அவர் வீரர்களால் சரியாக
களத்தடுப்பு செய்ய முடியாததால் சுழற்சி முறையை கடைப்பிடித்ததாகக் கூறி
தப்பித்துவிட முடியாது. சராசரியாக 15 ஓட்டங்கள் மட்டுமே அடிக்கும் ஒரு
வீரர் சிறப்பாக களத்தடுப்பு செய்கிறார் என்பதற்காக அவரை அணியில் வைத்து
எதைச் சாதிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.
இதேபோல்
நீண்ட காலமாக மோசமாக விளையாடி வரும் வீரர்களை அணியில்
வைத்திருக்கக்கூடாது. அப்படிப்பட்ட வீரர்களை, மற்ற வீரர்களைவிட திறமையான
வீரர்கள் என அனைத்து அணித்தலைவர்களுமே நினைக்கிறார்கள் என்பதை
ஒப்புக்கொள்கிறேன்.
ஒரு
வீரர் சரியாக விளையாடாத பட்சத்தில் அவர் திறமையானவர் என்பதற்காக நீண்ட
நாள்கள் அணியில் வைத்திருக்கக்கூடாது. 2015ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியை
கருத்தில் கொண்டு ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் தோனி.
ஆனால்
ரெய்னாவோ இப்போதே சரியாக விளையாடவில்லை. ரெய்னா தன்னை மேம்படுத்திக்
கொள்ளாவிட்டால் 2015ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கடுமையாகப் போராட
வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.