
ஐந்தாவது
ஐ.பி.எல் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4ம் திகதி
தொடங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக யுவராஜ் சிங்
இருந்தார்.
புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ள இவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு பதில் புதிய அணித்தலைவர் மற்றும் ஆலோசகராக கங்குலி
நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்
மூன்று தொடர்களில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கு தலைவராக இருந்தார்
கங்குலி. இவரது தலைமையில் கோல்கட்டா அணி பெரிய அளவில் சோபிக்காததால்,
நான்காவது தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் தெரிவு செய்யவில்லை.
நீண்ட
போராட்டத்துக்கு பின் கடந்த முறை அறிமுகமான புனே வாரியர்ஸ் அணி இவரை
ஒப்பந்தம் செய்தது. இதுகுறித்து புனே அணியின் உரிமையாளர் சுப்ரதா ராய்
கூறுகையில், ஐந்தாவது ஐ.பி.எல் தொடருக்கு புனே அணிக்கு தலைவர் மற்றும்
ஆலோசகராக கங்குலியை நியமித்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இவரது
அனுபவம் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். இவர் அணியில்
இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருந்து
வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன் என்றார்.