முன்னாள்
இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா சிறையில் இருக்கும் வரையில் புத்தாண்டு
கொண்டாட்டங்களில் ஈடுபடப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன
ரணதுங்க தெரிவித்துள்ளார்.”
“நெருக்கடியான நிலைமையிலேயே புத்தாண்டைக்
கொண்டாட நேரிட்டுள்ளது. நாடு என்ற ரீதியில் நோக்கும் போது நாம்
நெருக்கடியான நிலைமைகளை எதிர்நோக்கி வருகிறோம்.”
“வெள்ளைவேன் அபாயம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சர்வதேச அழுத்தங்கள் என பல்வேறு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.”
“இந்த ஆட்சியாளர்களுக்கு நல்ல புத்தியைக்
கொடுத்து நாட்டை நல்ல விதமாக ஆட்சி செய்ய வேண்டுமென அனைவரும் பிரார்த்தனை
செய்ய வேண்டும்” என்று அர்ஜூன ரணதுங்க கோரியுள்ளார்.