
உலக அளவில் கடல்
நீர்மட்டம் 1880ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவு தான்
உயர்ந்து இருந்தது. ஆனால் டாஸ் மேனியா நகருக்கு அருகில் நடத்திய
கணக்கெடுப்போ 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் இப்பகுதியில் ஆண்டுக்கு 4.2
மில்லி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது.
டாஸ்மேனி யா அருகில் கடல் நீர்மட்டம் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஒரே அளவில்
நிலையாக இருந்திருக்கிறது. ஆனால் 1880ம் ஆண்டுக்கு ப் பிறகுதான்
நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியிருக்கிறது.
புவியின் வெப்ப சராசரி
உயர்ந்து பனிப் பிரதேசங்களில் பனிம லைகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல்
நீர்மட்டம் பசிபி கி ல் உயரத் தொடங்கியது. இதன் வேகம் அதிகமாக இருக்கிறது.
துரு வப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருக த்
தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிவதால் நீர்மட்டம் உயர எது காரணம்
என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புவி வெப் பமடைவது இதே அளவு தொடர்ந்தால்
அது பருவ நிலைகளை மட்டும் அல்லாமல் கடல் நீர்மட்டங்களையும் பாதிக்கச்
செய்யும் என்பதை ஆய்வு தெரிவிக்கிறது. இப்போது பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள
மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதா ல் இந்த எச்சரிக்கை
அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரி க்கையாகவே கருதப்பட வேண்டும்.