ஐ.பி.எல் தொடரை இணையத்தளத்தில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


ஐந்தாவது ஐ.பி.எல் தொடர் டுவென்டி-20 போட்டிகளை இணையத்தளத்தில் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக வருத்தப்படுகின்றனர் நிர்வாகிகள். ஆனால் இணையத்தளத்தில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை, சரிபாதிக்கும் மேலாக அதாவது 56 சதவீதம் உயர்ந்துள்ளது பெரும் வியப்பாக உள்ளது....
தொடக்கவிழா உட்பட இதுவரை நடந்த போட்டிகளை 1.37 கோடி பேர் வரை இணையத்தளத்தில் பார்த்துள்ளனராம். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 88 லட்சமாகத்தான் இருந்துள்ளது.
இதில் பெங்களூரு, டில்லி நகரங்களில் மட்டும் 14 சதவீதத்தில் கண்டு களித்தனர். இரண்டாவது இடத்தில் மும்பை(13 சதவீதம்) வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் திகதி நடந்த பெங்களூரு- கொல்கத்தா இடையிலான போட்டியை மட்டும் அதிகப்படியாக 21.5 லட்சம் பேர் இணையத்தளத்தில் பார்த்தனர்.
இதுதவிர 60 ஆயிரம் பேர் தங்கள் கைபேசியில் ஐ.பி.எல் போட்டியை கண்டுகளிக்கின்றனர். இது கடந்தாண்டு எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாம்.
இதுகுறித்து கூகுள் இந்தியாவின் மீடியா சேல்ஸ் தலைவர் பிரவீண் சர்மா கூறுகையில், ஐ.பி.எல் போட்டிகளை இணையத்தளத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now