சினிமா பானியில் நடு வீதியில் கடத்தப்பட்டு இலங்கை பெண் கற்பழிப்பு! - சைப்பிரஸில் அசம்பாவிதம்

நடு வீதியில் கடத்தப்பட்டு இலங்கை பெண் கற்பழிப்பு! - சைப்பிரஸில் அசம்பாவிதம்இலங்கைப் பெண் ஒருவர் சைப்பிரஸின் தலைநகர் நிக்கோசியாவில் வைத்து பலாத்காரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நிக்கோசியாவின் சப்ரப் அக்லன்ஜா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் காரில் வந்த ஒருவர் காருக்குள் ஏறுமாறு தன்னை வற்புறுத்தியதாக இலங்கைப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்து தான் தப்பிக்க முயன்ற வேளை, காரில் வந்த நபர் தன்னை பலாத்காரப்படுத்தி காருக்குள் ஏற்றியதாக கூறியுள்ளார்.

பின்னர் நிக்கோசியாவில் கைவிடப்பட்ட இடமொன்றுக்கு தன்னை அழைத்துச் சென்ற நபர் பாலியல் உறவுகொள்ள அழைத்ததாகவும் அதற்கு தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் இலங்கைப் பெண் சைப்பிரஸ் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் தன்னை ஒரு ஆளில்லா இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக இலங்கைப் பெண் தெரிவித்துள்ளார்.

சைப்பிரஸின் அத்தலஸ்ஸா பூங்கா பகுதியில் வைத்து குறித்த இலங்கைப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் லிமாசோல் எவனியூ பகுதியில் இறக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைப் பெண்ணின் உடலில் வெட்டுக் காயங்களும் எரி காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாகவும் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பயன்படுத்தப்பட்ட காரின், உரிமையாளரை (22 வயது) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now