ஐபிஎல்
கிரிக்கெட் மீது இங்கிலாந்தில் பொறாமை ஏற்பட்டுள்ளது என்று அந்த நாட்டு
கிரிக்கெட் வீரர் கேவின் பீட்டர்சன் கூறியுள்ளார். டெல்லி டேர்டேவில்ஸ்
அணியில் இடம் பெற்றுள்ள அவர் மேலும் கூறியுள்ளது:
இங்கிலாந்தில் ஐபிஎல் தொடர்பாக எதிர்மறையான கருத்துகள் எழுந்துள்ளன.
இதற்கு பொறாமைதான் காரணம். இங்கிலாந்து பத்திரிகைகள் ஐபிஎல் லுக்கு எதிரான
செய்திகளையே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. இது
கவலையளிக்கும் விஷயம்தான் என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் கிரிக்கெட் பத்திரிகையான விஸ்டன்,
சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டை குறை கூறியிருந்தது. ஐபிஎல் போட்டியால்
சர்வதேச டெஸ்ட் போட்டிகள் பாதிக்கப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து
தோல்வியடைந்ததற்கு ஐபிஎல்-லும் ஒரு காரணம் என்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.