இந்தோனேசியாவின் குடிவரவு சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை அகற்ற அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி இம்மாத இறுதி முதல் இந்தோனேசியாவின் குடிவரவு சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையின் பெயர் நீக்கப்படவுள்ளதாகவும் இந்த வரிசையில் பங்களாதேஷும் அடங்குவதாகவும் இந்தோனேஷிய சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படுவதால் இலங்கை பிரஜைகள் இந்தோனேசியா பயணிப்பதற்கான விசா கெடுபிடிகள் தளர்த்தப்படவுள்ளன.
