வங்கிகளின்
கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம்
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இதுவரை 24 வீதமாக இருந்து வந்த கடன் அட்டை
வட்டி வீதம் 28 வீதமாக அதிகரிக்கவுள்ளது.
இலங்கையில் பால்மா மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தமையை
அடுத்தே இந்த தீர்மானத்தை வங்கிகள் மேற்கொண்டுள்ளன என்று
அறிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் மாத்திரம் 84 ஆயிரம் பேர் கடன் அட்டைகளை பெற்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 862340 ரூபா வட்டி லாபம் கிடைத்துள்ளது. எனினும் கடன் அட்டைக்காரர்களிடம் இருந்து இன்னும் 38.5 பில்லியன் ரூபா கிடைக்க வேண்டியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடன் அட்டைகளுக்கான விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளதாக தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. ஆகையினால் வட்டி வீதத்தையும் அதிகரிக்க முடியும் என்று அறிவிக்கப்படுகிறது.