அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் உளவு பார்த்ததாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகிய உளவுப் பிரிவினர் இலங்கை
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் இரகசியமாக கண்காணித்துள்ளன.
விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் இராஜாங்கச் செலயாளர் ஹிலாரி கிளின்ரன், உளவுப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது

