அரசை புகழ்ந்து பாடுவோருக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன: சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

அரசாங்கத்தை துதிபாடுவோருக்கு வரப் பிரசாதங்கள் வழங்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் புகழ்ந்து பாடுவோருக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கின்றன.எனினும், அநீதியான தீர்ப்புக்கள் குற்றச் செயல்களுக்கு எதிராக குரல் கொடுத்தால் குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும். இன்று நீதிமன்றக் கட்டமைப்பும் இந்த நெருக்கடி நிலைமையை எதிர்நோக்குகின்றது. 

திவிநெகும திட்டமானது அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்பதனை ஆளும் கட்சி அமைச்சர்களே ஒப்புக் கொள்கின்றனர்.அரசியல் அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் நலன்களை பாதிக்கும் என சுட்டிக்காட்டியதன் காரணமாகவே இன்று குற்றப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.போர் வெற்றியை மையப்படுத்தி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சி நோக்கி நகர்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.பிங்கிரிய பிரதேசத்தில் நடைபெற்ற சசுன அருண நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now