வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 126 சதுர கிலோ மீற்றர்
பரப்பிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருப்பதாக அடையாளம்
காணப்பட்ட 2016 சதுர கிலோ மீற்றர் பரப்பில் 1934 சதுர கிலோ மீற்றர்
பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மீதமுள்ள 126 சதுர கிலோ மீற்றர் பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றும்
பணிக்கென விசேட பயிற்சி பெற்ற 3600 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார
அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.
அதுமாத்திரமன்றி கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 39 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.