விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு

கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
 

விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்யும் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார குறிப்பிட்டார்.
கடந்த 29 ஆம் திகதி முதல் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 39 ஆயிரத்து 624 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now