நீர் வழங்கல் வடிகாலமைப்பு
சபை மற்றும் மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் இன்று
மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் இடம்பெற்ற
பேச்சுவர்த்தையை அடுத்தே தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டு ள்ளதாக நீர்
வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சம்பள
அதிகரிப்பு போதுமானதாக இல்லையெனத் தெரிவித்து நேற்று முன்தினம் குறித்த
சபைகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.நீர் வழங்கல்
வடிகாலமைப்பு சபை மற்றும் மின்சார சபை ஊழியர்களுக்கு 18 வீத சம்பள உயர்வை
வழங்குவதற்கு முன்னர் அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இருந்தபோதும்,
ஊழியர்கள் அதற்கு இணங்காமையால் நேற்றைய தினம் அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சு
வார்த்தையில் அடிப்படைச் சம்பளத்தை 25 வீதத்தால் உயர்த்துவதற்கு இணக்கம்
காணப்பட்டது. இதனையடுத்து இன்று மேற்கொள்ளப்படவிருந்த தொழிற்சங்கப்
போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
|
ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றம் - தொழிற்சங்கப் போராட்டம் முடிவில்
Labels:
இலங்கை